Featured post

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...

Saturday 17 June 2017

பெண் உறுப்பில் கிளிட்டோரிஸ் வெட்டி எடுக்கும் நிகழ்வு

Google+Originally shared by Kalaiy Arasan

இலங்கையில், முஸ்லிம் சமூகத்தில், பெண் பிள்ளைகளுக்கு நடக்கும் கிளிட்டோரிஸ் சிதைப்பு சடங்கு பற்றி பலரும் பலவிதமாகப் பேசத் தொடங்கி உள்ளனர். இது ஒரு வகையில் வரவேற்கத்தக்கது என்றாலும், அது பற்றிய தெளிவு, அதை விமர்சிப்பவர்களிடமும் சிலநேரம் இருப்பதில்லை.

பெண் உறுப்பில் கிளிட்டோரிஸ் வெட்டி எடுக்கும் நிகழ்வு, மிகவும் இரகசியமான முறையில் நடக்கிறது. ஒரு பழைமைவாத சமூகத்தில் ஆண்களும், பெண்களும் தமக்கென இரகசியங்கள் வைத்துக் கொள்ள அனுமதிக்கப் படுகின்றது. அதைப் பயன்படுத்தி, இந்த விடயத்தைப் பற்றி பெண்கள் ஆண்களுக்கு சொல்வதில்லை.

அதற்காக முஸ்லிம் ஆண்கள் எல்லோருக்கும் இந்த விடயம் தெரியாது என்று சொல்ல முடியாது. சில தகப்பன்மாருக்கும், கணவன்மாருக்கும் தெரிந்திருக்கலாம். இருப்பினும், இன்றைக்கும் அரசியல் ஆண்களின் ஆதிக்கத்தில் இருப்பதால், பொது வெளியில் இது கடுமையாக மறுக்கப் படுகின்றது.

அரசியல் என்பது அரசியல்வாதிகளுக்கு மட்டுமான தோற்றப்பாடு அல்ல. தெரிந்தோ தெரியாமலோ ஒட்டுமொத்த சமூகமும் அதில் பங்களிக்கிறது. ஆகையினால், முஸ்லிம் ஆணாதிக்க அரசியல் களத்தில் இந்தப் பிரச்சினையை முன்வைப்பதற்கு, பெண்களின் உரிமைகளைப் பற்றிப் பேசும் முஸ்லிம் பெண்ணியவாதிகளால் மட்டும் தான் முடியும். இஸ்லாமியரல்லாத பிற சமூகங்களை சேர்ந்த முற்போக்காளர்கள், இதை ஒரு மனித உரிமைப் பிரச்சினையாக மட்டுமே அணுக முடியும்.

முதலாவதாக, இது இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் நடக்கும் சடங்கு அல்ல. ஆப்பிரிக்காவில், கிறிஸ்தவ சமூகத்திலும் கிளிட்டோரிஸ் சிதைப்பு சடங்கு பின்பற்றப் படுகின்றது. அதற்காக, ஒரு மதம் என்பதால் இஸ்லாத்தை குற்றத்தில் இருந்து விடுவிக்கலாம் என்றும் அர்த்தம் அல்ல. (மதத்தை விமர்சிப்பதே பாவ காரியம் என்ற மனப்பான்மை இன்னும் பலரிடம் மாறவில்லை.)

இரண்டாவதாக, இது ஆயிரமாயிரம் வருடங்களாக தொடரும் பண்டைய கால மரபு ஆகும். அது இஸ்லாத்திற்கு முந்திய அரேபியாவிலும் இருந்திருக்கலாம். இன்றைய அரேபியர்கள் தம்மிடையே அந்தப் பழக்கம் இல்லை என்று மறுப்பார்கள். அது ஆப்பிரிக்கர்களுக்கே உரிய தனித்துவம் என்று சாதிப்பார்கள். அதுவும் தவறு தான்.

சில வருடங்களுக்கு முன்னர், அமெரிக்க மனித உரிமைகள் நிறுவனம், ஈராக்- குர்திஸ்தான் பிரதேசத்தில் கிளிடோரிஸ் சிதைப்பு சடங்கு நடப்பதாக ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட்டிருந்தது. குர்திஸ்தான் அரசு அதை உத்தியோகபூர்வமாக மறுத்திருந்தது. அந்தளவு தலைக்குனிவை உண்டாக்கி இருந்தது.

தம்மை மதச் சார்பற்ற தேசியவாதிகளாக காட்டிக் கொள்ளும் குர்திய மக்கள் மத்தியிலும் இந்தப் பழக்கம் இருப்பது ஆச்சரியத்தை உண்டாக்கலாம். ஆனால், எங்கெல்லாம் பழமைவாத மரபுகள் கோலோச்சுகின்றனவோ, அங்கெல்லாம் இது போன்ற பிரச்சினைகளும் இருக்கும்.

பிரித்தானியாவில் பெருமளவிலும், ஏனைய ஐரோப்பிய நாடுகளில் சிறிய அளவிலும், இந்தக் கிளிட்டோரிஸ் சிதைப்பு சடங்கு நடைபெறுகின்றது. குறிப்பாக, சோமாலியாவில் இருந்து வந்த குடியேறிகள் சமூகத்தில் அது சாதாரணமான நிகழ்வாக ஏற்றுக் கொள்ளப் படுகின்றது.

கடந்த சில வருடங்களாக ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக, அங்கு கிளிட்டோரிஸ் சிதைப்பு தடை செய்யப் பட்டுள்ளது. அதனால் பல சோமாலியர்கள், தாயகத்திற்கு சுற்றுலா சென்று வருவது என்ற சாட்டில் இந்த சடங்கை நிறைவேற்றுகிறார்கள்.

மேற்கத்திய நாடுகளில் சோமாலிய, எத்தியோப்பிய, சூடானிய குடியேறி சமூகங்களில் மட்டுமே இந்தப் பிரச்சினை உள்ளதாக பேசப் படுவதால், அரபு முஸ்லிம்கள் இதை இஸ்லாமிய மதத்திற்கு அப்பாற்பட்ட விடயம் என்று சாதிக்க முனைகின்றனர்.

பெரும்பான்மை அரேபியர்கள் மத்தியில் கிளிட்டோரிஸ் சிதைக்கும் மரபு இல்லையென்றால், அதன் அர்த்தம் அங்கு இடம்பெற்ற சமுதாய மாற்றம் தான். இஸ்லாம் என்ற மதம் அல்ல. இஸ்லாமிய சாம்ராஜ்யங்கள் இருந்த காலத்தில், அரேபிய சமுதாயம் பல நாகரிக மாற்றங்களை எதிர்கொண்டிருந்தது.

இருப்பினும், கிராமிய மட்டத்தில், அல்லது தொலைதூர பிரதேசங்களில் இந்த வழக்கம் இருந்திருக்க வாய்ப்புண்டு. இல்லாவிட்டால், இன்றைக்கும் குர்திஸ்தான் பகுதிகளில் நிலைத்திருந்தது எப்படி? அவர்கள் குர்தியர்கள் தான். இருப்பினும், அரேபியர்கள் மத்தியிலும் மிகச் சிறிய அளவில் இரகசியமாக நடக்கிறது. அதை யாரும் வெளியே சொல்வதில்லை என்பதற்காக அந்தப் பழக்கம் இல்லை என்று அர்த்தம் அல்ல.

ஒரு மதம் (இங்கே : இஸ்லாம்), பழமைவாத சம்பிரதாயம் தொடர்பான விமர்சனத்தில் இருந்து தப்ப முடியாது. ஆயிரமாயிரம் வருடங்களுக்கு முன்னர் இருந்த பண்டைய கால மரபுகளை மதங்கள் சட்டங்களாக மாற்றி விட்டுள்ளன. அதாவது, இன்று நாங்கள் எப்படி "சட்டத்திற்கு கட்டுப்பட்டு" நடக்கிறோமோ, அதே மாதிரி அந்தக் கால மக்கள் மதம் சொன்ன சட்டங்களின் கீழ் கட்டுப்படுத்தப் பட்டனர்.

ஒரு மதமானது, பண்டைய கால மரபுகளில் சிலவற்றை நிராகரித்து, சிலவற்றை ஏற்றுக்கொள்கின்றது. அது நிராகரிக்கும் விடயங்கள் அதிகாரம் சார்ந்ததாகவும், அது ஏற்றுக் கொள்ளும் விடயங்கள் மக்களின் மனங்களை வென்றெடுப்பதற்காகவும் இருந்துள்ளன.

உதாரணத்திற்கு, பத்துக்கும் குறையாத தெய்வங்களை சிலையாக வைத்து வழிபட்டு வந்த அரேபியர்களின் மதச் சம்பிரதாயம் மாற்றப் பட்டு, ஓரிறைக் கொள்கையை ஏற்க வைக்கப் பட்டனர். இதனை இஸ்லாம் செய்த இமாலய சாதனை என்று மத நம்பிக்கையாளர்கள் சொல்லிக் கொள்வார்கள்.

பலதெய்வ வழிபாட்டை நிராகரித்து, ஓரிறைக் கொள்கையை புகுத்தியது அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற தேவைப் பட்டது. ஆனால், அதே தெய்வங்களை வழிபட்ட மக்களின் மரபு வழிப் பழக்க வழக்கங்ககளை, புதிய மதமான இஸ்லாம் எந்தக் கேள்வியும் இல்லாமல் ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், அதை நியாயப் படுத்தியும் வந்தது.

இங்கு தான் கிளிட்டோரிஸ் சிதைப்பு தொடர்பான தெளிவின்மை தொடங்குகின்றது. இறைதூதர் முகமது பெண் உறுப்புச் சிதைப்பை அங்கீகரித்தமைக்கான ஹாடித் வாக்கியம் உள்ளதாக இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் கூறுகின்றனர். பிறப்புறுப்பில் வெட்டும் சடங்கானது, "ஆண்களுக்கு மரபுக்கு உரியதாகவும் (சுன்னா), பெண்களுக்கு மகிமை பொருந்தியதாகவும் (மக்ருமா) இருக்கிறது" என்று அந்த ஹாடித் வாக்கியம் சொல்கின்றது. (தகவல்: Sami A. Aldeeb Abu Sahlieh, a Palestinian-Swiss specialist in Islamic law)

ஆண் சிறுவர்களுக்கு குறியின் முன்தோலை சிதைக்கும் வழக்கம் இஸ்லாத்திற்கு முந்தியது. இன்றைக்கும் யூதர்கள் அதைப் பின்பற்றுகிறார்கள். எத்தியோப்பியாவில் கிறிஸ்தவர்களும் சுன்னத்து செய்து கொள்கிறார்கள். பண்டைய காலத்தில் யூதர்களின், பின்னர் கிறிஸ்தவர்களின் மரபாக இருந்ததை தான் இஸ்லாமும் பின்பற்றியது. அதே மாதிரி, பெண் பிள்ளைகளுக்கான கிளிட்டோரிஸ் சிதைப்பும் இஸ்லாத்திற்கு முந்திய மரபு தான்.

இந்த இடத்தில் மதம் குறித்த தப்பெண்ணம் ஒன்றும் நிலவுகின்றது. பைபிளிலும், குரானிலும் ஒரே மாதிரியான பழமைவாத பழக்க வழக்கங்கள் பற்றி சொல்லப் பட்டுள்ளன. இருப்பினும், கிறிஸ்தவ மதம் மாறி விட்டது, இஸ்லாம் இன்னும் மாறவில்லை என்பார்கள். எந்த மதமும் மாறுவதில்லை. "ஆண்டவரின் ஆணைப்படி நடக்கும்" மதங்கள் எவ்வாறு மாற முடியும்?

இங்கே முக்கியமானது மதம் அல்ல, அதைப் பின்பற்றும் மனிதர்கள் தான். ஐரோப்பாவில் நடந்த லிபரல் புரட்சிகள், அரசையும், மதத்தையும் பிரித்து வைத்தன. லிபரலிசம் என்ற புதிய சித்தாந்தப் படி மக்களை சிந்திக்க வைத்தனர்.

முஸ்லிம் நாடுகளிலும் லிபரலிசம் பரவி உள்ளது. இருப்பினும், ஆட்சியாளர்கள் தமது நன்மைக்காக பழமைவாத மரபுகளை கொண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். தேர்தல் நடந்து கட்சிகள் மாறுவதால், சமூகத்தில் எந்த மாற்றமும் வந்து விடாது. அதற்கு ஒரு சமூகப் புரட்சி அவசியம். 

Tuesday 23 May 2017

Wednesday, 17 May 2017

தாய் மொழி-தேசிய மொழி-சந்தைக்கான மொழி பரஸ்பர உறவுகள்
உலகளாவிய முறையில் ஒருங்கமைக்கப்பட்டுவரும்  இந்தியச் சந்தையில் மொழிக்கு இருக்கும் தகமையும், “சுதந்திரமும்” வேறு, தேசியப் பண்பாட்டை உருவாக்கு வதிலும், தேசத்தின் செயல்பாட்டை உறுதிப்படுத்து வதிலும் மொழிக்கு இருக்கும் தகமையும், “சுதந்திரமும்” வேறு.
இந்தியச் சந்தையும் மொழியும்:
சந்தையென்பது எதைக் குறிக்கிறது? பண்ட உற்பத்தியா ளர்கள் நுகர்வோருடனும், சேவை வழங்குவோர், கலைப்படைப்பாளர்கள், ஆகியோர் தமது உற்பத்திகளை தேவைப்படுவோருடனும், பணமுடையோர் தமது பணத்தை தேவைப்படுவோருடனும், மூளை உழைப்பா ளர்கள், உடல் உழைப்பாளர்கள் ஆகியோர் தமுது உழைப்பை தேவப்படுவோருடனும் பணத்துக்காக கொடுத்து வாங்கும் ஒரு பொதுவெளியே சந்தை எனப்படும். இவ்விதம் நோக்கின் சமூகமே ஒரு சந்தைதான். இச் சந்தையின் செயற்பாட்டை சுமூக- மாக்குவதற்கான ஒரு கருவியே மொழியாகும். எந்தச் சந்தைகளிலானாலும் சரி, அந்தச் சந்தையில் மொழி ஒரு கருவி மாத்திரமே. தொழில் தேடவும், தொழில் முயற்சிகளை வளர்க்கவும், வாணிபத்தை மேற்கொள்ள- வும் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். சந்தையின் சுதந்திரம் என்பது நுகர்வோர் தமக்குத் தேவையான சரக்கை தாம் வாங்கிக்கொள்ளவும், உற்பத்தியாளர்கள் தமது சரக்குகளை விற்றுக்கொள்ளவுமான சுதந்திரமா- கும். உழைப்பும் வாங்கவும் விற்கவுமானதொரு சரக்கேயாகும்.
இச் சந்தையிலான தனது செயற்பாட்டை சுமூகமாக்கிக் கொள்வதற்காக அவர் எந்த மொழியையும், எத்தனை மொழியையும் பயன்படுத்திக் கொள்ளலாம்; எந்த மொழியையும் கைவிடலாம். அவர் கைவிட விரும்புவது அவரது “தாய் மொழியாகக்’ கூட இருக்கலாம். அது அவரின் சொந்தவிருப்பம். எவ்வெவ் மொழிகளின் அறிவை எந்தெந்தளவு தூரத்திற்கு வளர்த்துக் கொள்ளலாம் என்பதுவும் அவரின் உரிமை. சந்தைச் சுதந்திரத்தை ஏற்றுக்கொள்ளும் எவரும் தனி மனித மொழி சுதந்திரத்தையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
இந்தக் கோணத்தில் இருந்து நோக்கினால், சினிமாவுக்கு தமிழ்ப் பெயர் வைக்கக் கேட்டுக்கொண்டதுவும், தனியார் பாடசாலைகளில் தமிழைக் கட்டாய பாடமாக்கக் கோருவதும் தமிழர்கள் மீதான தமிழ்த் திணிப்புத்தானே? ஆங்கிலத்தை தனது சந்தை மொழியாக சுய விருப்ப- முடன் தேர்ந்தெடுத்துவிட்ட தமிழனை ‘தமிழா நீ பேசுவது தமிழா?’ எனக் கிண்டல் செய்வதுவும் தமிழர்கள் மீதான தமிழ்த் திணிப்புத்தானே? மொழியை ஒரு கருவியாகக் கருதினால், தனது சந்தைத் தேவைகளுக்காக தாய் மொழியைக் கூட புறந்தள்ளி- வைக்கும் உரிமை எவருக்கும் உண்டென்பதை ஏற்றுக்கொண்டால் தாய் மொழியேயானாலும் கூட அதைக் கட்டாயப்படுத்த முடியாது. எந்தெந்த மொழியை எவ்வெவ் இடத்தில் பயன்படுத்திக் கொள்வதென்பதைத் தீர்மானிப்பது அவரவரின் சொந்த உரிமை. தமிழ் நாட்டவரில் அநேகர் தமது சந்தைப்பொது மொழியாக தமிழுடன் கூடவே ஆங்கிலத்தையும் தேர்ந்தெடுத்து- ள்ளார்கள் என்பதை யாரும் மறுக்கமுடியுமா? தமிழ்நாட்டின் நுட்பமான சந்தைகள் ஆங்கிலத்தை நோக்கியே நகர்கின்றன என்பதையும் மறுக்கமுடியுமா?   அவசியமேற்பட்டால் நாளை ஹிந்தியையும் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். அதற்கென்ன இப்போ?

ஒரு நாட்டின் சந்தையில் முழுமையான, நிபந்தனை- களற்ற தனிமனித மொழிச் சுதந்திரம் இருந்தால்தான் அந்நாடு பொருளாதார ரீதியில் வளர்ச்சிபெறும். அதுவும் பன்மொழிப் பயன்பாடுள்ள நாட்டில் பன்மொழித்திறமை அவசியம்.
தேசியப் பண்பாடும் மொழியும்:

அதே நேரத்தில், தேசிய பண்பாட்டை உருவாக்குவதிலோ தனிநபர் மொழிச் சுதந்திரம் நிபந்தனைக்கு உட்பட்டது. தனி நபர் பூரண சுதந்திரம் என்றொன்று அங்கு இல்லை. இருக்கவும் கூடாது. ஏனெனில், தேசியப் பண்பாடும் தேசியமொழியும் ஒன்றிலிருந்தொன்றைப் பிரிக்க முடியாத தேசியப் படைப்புகளாகும். தேசியப் பண்பாட்டின் வளர்ச்சிக்கு மிக அதிகமாகத் துணைபோகும் மொழி எதுவோ அதுதான அத்தேசப் பிரஜைகளின் தேசியமொழியாகும். அத் தேசிய மொழியில் அத்தேசப் பிரஜைகள்  சரளமாகப் பயிற்ச்சி பெற்றிருப்பது அவசியமானதும் கட்டாயமானதுமாகும். அத் தேசத்தால் தேர்ந்தெடுக்கப்படும் அத்தேசியமொழி அத்தேசத்தின் பெரும்பான்மையான மக்களின் மரபுவழிவந்ததாகவும்(தாய்மொழி) இருக்கலாம், மரபொழிந்த நிலையில் இருந்து மீட்கப்பட்ட மரபுமொழி- யாகவும் இருக்கலாம், புதிதாக உருவாக்கப்பட்டதாகவும் இருக்கலாம், புகுந்த அல்லது புகுத்தப்பட்ட மொழியாகவும் இருக்கலாம், பிற மொழித் தழுவ- லாகவும் இருக்கலாம், ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளாகவும் இருக்கலாம். இவற்றில் எது அல்லது எவை தேசியமொழி/தேசியமொழிகள்  என்பதை அத்தேசமே தீர்மானித்துக் கொள்ளவேண்டும்; மாறாமர- பியல் வாதிகளும் (அடிப்படைவாதிகள்-மொழி தூய்மை- வாதிகள்) தீர்மானிக்கக் கூடாது; அதிகாரம் செலுத்தும் அந்நியரும் தீமானிக்கக் கூடாது. ஜனநாயக வழிமுறையில் அத் தேசத்தின் மக்களே அதைத் தீர்மானித்துக் கொள்ளவேண்டும்.
தேசிய சந்தையில் மொழியெனும் கருவுக்குரிய முழுமையான தனிநபர் சுதந்திரம், தேசியப் பண்பாட்டரங்கினில் மொழிக்கு இல்லை; இருக்கவும் கூடாது. ஏனெனில் தேசப் பண்பாட்டரங்கில் மொழியானது, பண்பாட்டின் வங்கியாகவும், வளர் நிலமாகவும்(விளைநிலமல்ல-பண்பாட்டின் விளைநிலம் மக்களே) செயல்படுகிறது. அது மடுமல்ல, தேசிய மொழி தன்மட்டில் தானே ஒரு பண்பாடாகவும் செயல்படுகிறது. தமிழ் மொழிக்கு அத்தன்மை உள்ளதை உற்றுநோக்கில் புரிந்து கொள்ளலாம்.
தேசிய மொழி, தேசிய சந்தை, தேசியப் பண்பாடு, தேச அரசு இவைநான்கும் இருந்தால்தான் ஒரு நாடு தேசம் என்ற நிலையை அடையும்.
இந்தியாவை ஒரு முழுமையான, ஏகமான தேசமாக ஏற்றுக்கொள்பவர்கள் அத்தேசத்திற்கான தேசியமொழி- யை அல்லது மொழிகளை உருவாக்குவது அவசியமே. அவ்விதம் இருந்தால்தான் ஒரு தேசம் வாழும். இல்லையேல் தேசம் இறந்துவிடும். அல்லது ஊனமுற்ற தேசமாகிவிடும். இந்தியாவை ஒருஏகமான தேசமாக ஏற்றுக்கொள்பவர்களில் ஒருசாரார், சதுர்-வர்ணத்தையும், பார்ப்பனியத்தையுந்தான் இந்தியாவின் தேசியப் பண்பாடாக ஏற்றுக் கொள்கிறார்கள். சமஸ்கிருதமும் ஹிந்தியுமே இப் பண்பாட்டிற்க்கு பொருத்தமான மொழி எனக் கருதுகிறார்கள். அதனால் சமஸ்கிருதத்தையும் ஹிந்தியையும் திணிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். பௌத்தத்தை இந்திய தேசியப் பண்பாடாக ஏற்றுக் கொள்பவர்கள் பாளி மொழியைத் திணிக்கலாம், இஸ்லாமியப் பண்பாட்டைத்தான் இந்தியத் தேசியப் பண்பாடாக ஏற்றுக்கொள்பவர்கள் உருது மொழியைத் திணிக்கலாம், ஐரோப்பிய நாகரிகத்தைத்தான் தமது பண்பாடாகக் கொள்பவர்கள் ஆங்கில மொழியைத் திணிக்கலாம். இத்திணிப்புகள் எதுவுமே தவறில்லை. அவரவர்கள் தத்தமது தேசத்துக்கென ஒரு தேசிய மொழியை உருவாக்கிக் கொள்கிறார்கள். அவ்வளவே.

தவறு எதுவென்றால், ஏகத் தன்மை பெற்ற இந்தியத் தேசியப் பண்பாடு என்றொன்று உள்ளதெனக் கருதுவதுதான் பாரிய தவறு. அவ்விதமொன்று இன்றுவரை உருவாகிவரவுமில்லை உருவாக்கப்படவு- மில்லை. ‘தேச அரசொன்றேஇல்லாத போது, தேசியப் பண்பாடொன்று எவ்விதம் தோன்றும்? பார்ப்பனிய சமஸ்கிரத இந்தியா பாளியிடம் தோற்றது.  பௌத்த இந்தியா உருதுவிடம் தோற்றது, மொகலாய இந்தியா ஆங்கிலத்திடம் தோற்றது, திராவிடநாடு எனக்கூறி சமஸ்கிருதத்துடன் போராடிய திராவிட மொழிகளில் பல சமஸ்கிருத்திடம் அடிபணிந்தன அல்லது அதனுடன் சங்கமித்தன. ஏற்கனவே தோல்விகண்ட சமஸ்கிருதம், ஹிந்தி மொழியுடன் ஒரு கூட்டமைத்துக் கொண்டு, இப்போது மீண்டும் ஏகத் தன்மைபெற்ற இந்தியத் தேசியப் பண்பாட்டை உருவாக்கக் களம் இறங்கியுள்ளது.

இச் சூழலில், மொழித்திணிப்புக்கு எதிரான போராட்டம் மட்டும் நடத்திப் பலனில்லை. ஏகத் தன்மையற்ற தேசியப் பண்பாடு தோன்றும் வரை இம்முயற்ச்சியில் எந்த மாநிலமும் வெற்றிகாணப்போவதில்லை. ஆகவே இந்தித் திணிப்பைத் தடுத்துநிறுத்த வேண்டுமானால், ஏகத் தன்மைபெற்ற இந்தியத் தேசியத்துக்குப் பதிலாக பல்முகத்தன்மையும், பல்படித்தன்மையும் பெற்ற, அனைத்து மாநிலங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தியப் பண்பாட்டைத் தோற்றுவிப்பதைத் தம்முடைய பிரதான போராட்டமாகக் கொள்ளவேண்டும். இது மேலிருந்து ஏற்படுத்தப்படும் மாற்றமாகும். இந்திய பாராளுமன்ற இடதுசாரிக் கட்சிகள் 1946இல் இருந்து இதைத்தான் செய்துவருகிறார்கள்.
மேலிருந்து எடுக்கப்படும் மாற்றம் சாத்தியமில்லை என்று கருதுபவர்கள்
இந்திய நாட்டை பல ‘தனித்துவத் தேசியப் பண்பாட்டு முழுமைகளின் ஒன்றியமாக மாற்ற முற்படவேண்டும். அதற்காகப் போராடவேண்டும். தத்தமது மாநிலங்களுக்கான தேசியப் பண்பாடு, தேசிய மொழி, தேசிய சந்தை ஆகியவற்றிற்காகப் போராடவேண்டும். இது இவர்களின் முதலாவது போராட்ட முனையாகும். இரண்டாவது முனை இம் முழுமைகளை சுயவ்ருப்புடனான ஒன்றியமாக உருவாக்கப் போராடுவது. இது கீழிருந்து ஏற்படுத்தப்படும் மாற்றமாகும். மூல திராவிட இயக்கங்களும், திரிபுவாத(புரட்டல்வாத) திராவிடர் இயக்கங்களும் (தி.மு.க; அ.தி.மு.க; ம.தி.மு.க) இப் பாதையே பின்பற்றிவருகிறார்கள்.
பல்முகத்தன்மையும், பல்படித்தன்மையும் பெற்ற இந்தியப் பண்பாட்டைத் தோற்றுவிப்பது அல்லது பல ‘தனித்துவத் தேசியப் பண்பாட்டு முழுமைகளின் ஒன்றியமாக இந்தியாவை மாற்றுவது ஆகிய இவை இரண்டுமே சாத்தியமில்லையானால், இலங்கையைப் போல் இந்தியாவும் உள்நாட்டு யுத்தகளமாக மாறி அல்லலுறப்போவது தவிர்க்க முடியாதது. இதனால் இந்திய மேட்டுக்குடிகளும் பாதிக்கப்படுவார்கள், இந்திய உழைக்கும் மக்களும் பாதிக்கப்படுவார்கள்.
இரு மொழியானால் ஒரு நாடுஎன்பதைக் கணக்கில் கொள்ளாமல், ஒரு மொழியாகியதால் இரு நாடுகள் எனும் நிலைக்கு உள்ளாகியிருக்கும் இலங்கையின் சோகக்கதை இந்தியாவுக்கு வேண்டாம். அனைத்து மாநில மொழிகளையும் தேசிய மொழிகளாகக் கொண்ட இந்தியாவை நோக்கிப் பயணிப்போம்.

Tuesday 9 May 2017

Saturday, 29 April 2017

“சமதர்ம குவிமைய ஐந்தியல் கோட்பாடு”- அறிமுகம்

சமதர்ம குவிமைய ஐந்தியல் கோட்பாடு”- அறிமுகம்
தெற்காசிய சமூக உருவாக்கத்தில் காணப்படும் வளர்திசைக் குணாம்சமுடைய (Posotive isms) இயல்களை பின்வரும் ஆறு தலைப்புகளின் கீழ் பட்டியலிடமுடியும். அவையாவன:
1.   நாட்டுப்பற்றியல் Partiotism
2.   தேசிய விடுதலை இயல்-National Liberationaism (தேசங்கள், தேசிய இன குழுமங்கள்(Ethno-Nationalism), ஆதிக்குடியினர்(indigenous), பழங்குடியினர்(Tribalism) பிரதேசவாதம்(regionalism) ஆகியவை.
3.   சாதி ஒழிப்பியல்( இந்தியப் பயன்பாட்டில் இது தலித்தியல்)
4.   ஆண் சமூக-பேரகங்கார ஒழிப்பியல். Feminism
5.   மத சார்பின்மையியல்- Secularism
6.   சமதர்ம இயல்
இச் சமூகத்தை முன்னோக்கி நகர்த்திச் செல்வதில் இவ் ஆறு இயல்களினதும் இயங்குவிதிபற்றிய கோட்பாடே சமதர்ம குவிமைய ஐந்தியல் கோட்பாடு என குறிக்கப்படுகிறது.
இவ் ஆறு இயல்களும் வளர்திசை இயல்களாக இருக்கும் போது, சமதர்ம இயலை இதிலிருந்து வேறுபடுத்தி உயர்வான இடத்தில் வைத்தது ஏன்? சமதர்மம் தவிர்ந்த பிற ஐந்து வளர் திசை இயல்களும் தெற்காசிய சமூக உருவாக்கத்தின் தனித்தனி நிகழ்வுப்போக்குகளுக்கானவை. இவற்றால் சமூகத்தின் ஒட்டுமொத்த பிரச்சனைக்கான தீர்வை வழங்க முடியாது. ஆனால் சமதர்ம இயல் அவ்விதமல்ல. அது சமூக உருவாக்கத்தின் ஒட்டுமொத்த நிகழ்வுப் போக்குக்குமானது. சமூகத்தின் ஒட்டு மொத்த பிரச்சனைக்குமான தீர்வை வழங்கக் கூடிய தன்மை அதற்க்கு மட்டுமேயுண்டு. இதனால், சமதர்ம இயல் தனித்துச் செயற்படும் அதேவெளை எனைய ஐந்து இயல்களின் குவிமையமாகச் செயற்படவேண்டிய அவசியம் உள்ளது. சமதர்ம இயலின் இத் தனிவிசேடத் தன்மையின் காரணத்தால்தான் பிற ஐந்துடனும் இது சேர்க்கப்படவில்லை. எனவேதான் இக்கோட்பாடு “சமதர்ம குவிமைய ஐந்தியல் கோட்பாடுஎன அழைக்கப்படுகிறது.
“குவிமையம்என்பது எதைக்குறிக்கிறது?
சமதர்ம இயல் தவிர பிற ஐந்து இயல்களும், தவிர்க்க முடியாமல் ஓரிடத்தை நோக்கிக் குவியும்; குவிந்தேயாகவேண்டும். இது இயல்பாகும். இன்றைய சமூக சூழலில் அவை ஒன்றில் முதலாளித்துவ சீர்திருத்தத்தை நோக்கிக் குவியவேண்டும், அல்லது சமதர்ம சமூக ஒழுங்குகளை நோக்கிக் குவியவேண்டும். இந்த இரண்டில் எதுவும் நடக்கலாம். சமதர்மத்தை நோக்கிக் குவியவேண்டும் என்பதே இக்கோட்பாட்டின் குறிக்கோளாகும்.
அடுத்தபக்கத்தில், வர்க்கப்போராட்டத்தைத்தான் தமது அடிப்படைப் போராட்டமாக கருதிச் செயற்படும் சமதர்மவியல் கோட்பாட்டாளர்கள், அதேவேளை முன்க்கூரிய ஐவகைப் போராட்டங்களையும் வர்க்கப்போராட்டத்தை நோக்கிக் குவிக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். ஐவர் ஒரு குவிமையத்தை நோக்கி நகர்கிறார்கள், சமதர்மவாதிகளோ ஒரு குவிமையத்தை உருவாக்குகிறார்கள். இதுதான் குவிமையம் என்பதன் அர்த்தமாகும்.
சமதர்மத்தை நோக்கிக் குவியவேண்டும் என்பதே இக்கோட்பாட்டின் குறிக்கோளாகும் எனக் கூறுவது எதற்காக?
அவ்விதம் குவியவில்லையேல், இவ் ஐந்து இயல்களையும் அடித்தளமாகக் கொண்டு எழும் வீரமிகு போராட்டங்கள் அனைத்தும் ஒன்றில் விழலுக்கு இறைத்த நீராகிப்போகும் அல்லது வல்லரசியத்தால் காவுகொள்ளப்படும் அல்லது இவ் இயல்களின் எதிர்முனையை நோக்கி நகர்ந்து புரட்சிகர பரிமாணத்திற்குப் பதிலாக நாசகாரப் பரிமாணத்தை எடுப்பதில் முடிவடையும். இது இயல்பானது. இது ஒரு பக்கம்.
அடுத்தபக்கத்தில் இவ் ஐந்து இயல்களினதும் குவிமையமாக மாறத்தவறும் சமதர்மவியல், ஒன்றில் இவ்வியல்களின் வால்பிடியாக மாறும் அல்லது தத்தமது நாட்டின் மேட்டுக்குடிகளின் வால்பிடியாக மாறும். இவ் வால்பிடிஇயலே நவீன திரிபுவாதம், நவ-நவீன திரிபுவாதம் எனப் பொதுவாக அழைக்கப்படுகிறது. 

சமதர்மத்தை குவிமைய இயலாக மாற்றுவதன் மூலமே சமதர்ம இயல் தன்னை மீழ் உற்பத்தி செய்து கொள்ள முடியும். அப்போதுதான், அப்போது மட்டுந்தான் தெற்காசிய சமூகம் சமதர்மக் கட்டமைப்பை நோக்கி வெற்றிகரமாகப் பயணிப்பதை உத்தரவாதப் படுத்தமுடியும். 
ஆனால், குவிப்பதுவும், குவிவதுவும் கட்டாயப்படுத்தப்பட்டதாக அமையக் கூடாது, இயல்பானதாக அமையவேண்டும்.
ஏடறிந்த வரலாற்றுக் காலத்தில் இருந்து தெற்காசியா பண்பாட்டுக்கட்டுமானத்தில் நடந்துவரும் அறநெறிப்போராட்டத்திற்கு புகழ்பெற்ற பிரதேசமாகும். இதன் வரலாற்று முக்கியத்துவம் சாதாரணமானதல்ல. அவ்விதமிருக்க அறவியலையும் ஒரு இயலாகச் சேர்த்துக்கொள்ளாதது ஏன் எனும் கேழ்வி எழுகிறது. வரலாற்று வழிவந்த அறெநெறிப் போராளிகள் அனைவரும் அற இயலெனும் ஒரு தனி இயலைக் கொண்டிருக்க வில்லை.
சாதி ஒழிப்பியல்( இந்தியப் பயன்பாட்டில் இது தலித்தியல்)                ஆண் சமூக-பேரகங்கார ஒழிப்பியல். Feminism                                                               மத சார்பின்மையியல்- Secularism                                                                                                 ஆகிய மூன்று இயல்களில் ஏதோ ஒன்று அல்லது அனைத்தும்தான் அவர்களின் இயல்களாக இருந்துள்ளன. அகவேதான் அது ஒரு தனி இயலாக எடுக்கபடவில்லை. 15/04/17 சனிக்கிழமை
Wednesday, 26 April 2017
Vidiyal is for What?

Vidiyal is a theoretical Campaigner for Stability and Equality in Southasia.
To achieve this End, Vidiyal want our Region (Southasia)
        I.            to be free from aliens’ forced   interventions /interferences.
      II.            to be free from all sort of national, ethno-national, tribally  discriminations.
    III.           to be free from all sort of gender discriminations.
    IV.           to be free from all type of religious discriminations.
      V.            to be free from all type of social norms and traditions based on Casteism.
    VI.            to be free from labor exploitation  and wealth exploitation.
Vidiyal is for theoretical contributions towards the formation of such a region.
Vidiyal assumes that, promoting these six core goals depend on the correct understanding of the following theories (isms).
1.       Patriotism
2.       Nationalism, Federalism, ethnic-nationalism, Tribalism, Regionalism
3.       Gender Equalitarianism
4.       Secularism
5.       Anti-Casteism
6.       Socialism
Vidiyal proclaim that these six ‘isms’ are highly integrated, and function as the decisive ‘isms’ in our region.   And, declare that socialism shall be achieved only by implementing Socialism as the central focal(nucleus) of all other ‘isms’. Vidiyal theorize the positive dynamics of these six ‘isms’ as “Socialist centered five ‘isms’ Theory”.
Vidiyal is for Propagating and developing this theory.