Featured post

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...

Showing posts with label மது. Show all posts
Showing posts with label மது. Show all posts

Thursday, 27 December 2018

மதுவின் கோரத்தாண்டவத்திற்குத் துணைநிற்கும் காரணிகள் தொடர்-2



பூரண மதுஒழிப்பும், அரசியல் கட்சிகளின் கபட நாடகங்களும்.

          இந்தியளவிலான பிரதான இரு முதலாளித்துவ தேசியக் கட்சிகளும், பூரணமது ஒழிப்பு சாத்தியமில்லை என்பதை மக்களுக்கு உணர்த்திவிட்டன. ஆனால் அவர்களின் மாநிலக் கிழைகளும், ஆளும் கட்சி தவிர்ந்த அனைத்து பிற மாநில முதலாளித்துவக் கட்சிகளும், எதிர்க் கட்சிகளாக இருக்கும் கிட்டத்தட்ட அனைத்து நடுத்தரவர்க்கக் கட்சிகளும் மதுஒழிப்புப்பற்றி அதிகம் முழங்கிவருகின்றன. கட்சிகளின் தலைவர்களுக்கும் அதன் நெருக்கமான தொண்டர்களுக்கும், கட்சிகளின் சிந்தனைப் பட்டறைகளுக்கும் தெரியும், இது நடமுறைச் சாத்தியம் அற்றதென்று. தாம் நன்றாக நடிக்கின்றோம் என்பதுவும் அவர்களுக்குத் தெரியும். ஆனால் நடித்தேயாக வேண்டும் என்பது அவசிய மானதாய் உள்ளது. இந்த நடிப்பும், ஆவேசப் பாவனையும் வெறுமனே வாக்குத் தேடுவதற்கானதல்ல. நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதிகளாக உள்ள சின்னக் கட்சிகளின் குறிக்கோள் இவ்விதமானதாக இருக்கலாம், இதில் அவர்கள் சிற்சில வெற்றிகளைப் பெறவும் கூடும். ஆனால் பெரிய கட்சிகளின் குறிக்கோள் வெறுமனே வாக்குச்சீட்டுகள் அல்ல. மதுவின் அரக்கத்தனத்துக்கு எதிரான மக்களின் இயல்பான, கபடத்தனமற்ற கோபத்துடனும், மது பயன்பாட்டுக்கும் வினியோகத்துக்கும் எதிரான அவர்களது வேலைத் திட்டங்களுடனும் ஒத்தோடுவதுபோல் பாசாங்கு பண்ணி இவற்றிற்கு எதிரான மக்களின் போராட்டங்களை நீத்துப் போகச்செவது, முடியாத பட்சத்தில் அவற்றை திசைதிருப்புவது ஆகியவைதான் இவர்களின் குறிக்கோளாகும்.
             ஏனெனில், பூரண மதுவிலக்கு, மதுவிலக்கு, அரைகுறை மது ஒழிப்பு, படிப்படியான மதுஒழிப்பு ஆகிய இவற்றில் எதையுமே சாத்தியமற்றதாக் குவதற்கான காரணிகளில் இக்கட்சிகளும் ஒன்றாகும். நீண்டு நின்று பிடித்துச் செயல்படும் காரணி இவ் அரசியல் கட்சிகளல்ல. இதற்கான வேறோர் அடிப்படைக் காரணியுண்டு. அவ் அடிப்படைக் காரணி  இவர்களின் விருப்புவெறுப்புக்கு அப்பாற்பட்டதாகும். இவர்கள் நிஜமாகவே மது ஒழிப்பை விரும்பினாலுங்கூட அது சாத்தியமில்லை. சந்தையில் போதைப் பொருட்களுக் கான தேவை இல்லாது போகும்வரை போதைப் பொருட்களும் இருக்கும். தேவைபெருகப் பெருக போதைப்பொருடகளின் உற்பத்தி விற்பனவு ஆகியனவும் பெருகும். தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாயென்பது போதைப் பொருட்களுக்கும் பொருந்தும்.(necessity is the mother of invention). இக்கூற்றுக்கு ஆதரவாக மூன்று முக்கிய எடுத்துக் காட்டுகளை பார்ப்போம்.

          முதலாவது எடுத்துக் காட்டு:- சீனக் கம்யூனிட் கட்சி போதைப் பொருட் பாவனை யைத் தடுப்பதில் முழு மனதுடன் மிகக் கண்டிப்பாகவே நடந்து கொள்கிறது. அந்நாட்டில் போதைப்பொருள் உற்பத்தியும் விநியோகமும் தடைசெய்யப் பட்டுள்ளன. இருந்தும் இன்று சீனாவில் போதைப்பொருள் பயன்பாடு மிகத்துரிதமாக வளரத்தொடங்கியுள்ளது. ------------- நடந்த அபினி யுத்தத்தை சீனர்கள் மீண்டும் நினைவுகூறத் தொடங்கியுள்ளனர். சீனாவில் மீண்டும் ஒரு அபினியுத்தம் நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. போதைப் பொருள் தேவைக்கான ஒரு சந்தையாக சீனா மாறியது எவ்விதம்? அதற்குத் துணைபுரிந்த அக, புறக் காரணிகள் என்ன?
          எடுத்துக்காட்டு 2:-சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி கம்யூனிஸக் கொள்கையை கைவிடுவதற்காக நடத்திய திறந்த கொள்கை இயக்கத்தின் போது வொட்கா(ருஷ்ய மது) பயன்பாட்டை அதிகரிப்போம் எனக் கூறவில்லை. டாஸ்மார்க் கடைகள் ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால், சோவியத் யூனியன் சிதைய முன்னரேயே ருஷ்யர்கள் வொட்கா விற்கு அடிமையாகிவிட்டார்கள். உலகின் முன்னணிக் குடிகார நாடுகளில் ருஷ்யாவும் ஒன்றாகி இருந்தது.
        எடுத்துக்காட்டு 3:- ஐக்கிய அமெரிக்க குடியரசில் மதுபானத்துக்கு எந்தத் தடையும் இல்லை. போதை ஏற்படுத்தும் தன்மை மது பானத்துக்கும் உண்டு. ஆனால் அப்போதையால் திருப்திப்படாத அமெரிக்கமக்கள் நவீன போதைப்பொருட்களுக்கான மிகப்பெரும் சந்தையாக மாறினார்கள். ஆனால் அமெரிக்க அரசு போதைப்பொருள் உற்பத் தியையும் விநியோகத்தையும் தடைசெய்தே உள்ளது. துப்பாக்கியைக் கூடத் தடைசெய்யாத அமெரிக்க அரசு போதைபொருட்களை தடைசெய்துள்ளது. அயல் நாடுகளில் இருந்தே போதைப்பொருட்கள் அமெரிக்காவுக்குக் கடத்தப்படுகின்றன. ஆனால் எந்த அயல் நாடும் தமது நாடுகளில் போதைப்பொருள் உற்பத்திக்கும் விநியோகத்துக்கும் எந்தச் சட்ட அங்கிகாரமும் வளங்கவில்லை. அமெரிக்காவும், அதன அயல்நாடுகளும் சேர்ந்து நடவடிக்கை எடுத்தும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கமுடியவில்லை. போதைப் பொருள் கடத்தல்காரர்கள் நாடற்ற ஒரு அரசாகவே செயல் படுகிறார்கள். நவீன கருவிகளைக் கொண்ட தரைப்படையும் கடற்படையும் அவர்களிடம் உண்டு. போதைப் பொருள் உற்பத்தியிலும் விற்பனவிலும் கிடைக்கும் இலாபம் கொட்டிக் குவிகிறது.
           மது உட்பட போதைப் பொருள் பாவனைக்கான நீடித்து நின்றுபிடித்திச் செயற் படும் அடிப்படைக் காரணி அந்நாட்டின் அரசியல் கட்சிகளல்ல. இக்காரணி கட்சிகளின் விருப்புவெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது. சந்தைத் தேவையை உருவாக்குவது இவர்களல்ல. அவ்விதமானால் அது எது என்பது பற்றிய கருத்தைக் கூறுவது இக்கட்டுரையின் இவ்விடக் குறிக் கோளல்ல. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை மது ஒழிப்பைச் சாத்திய மற்றதாக்கும், அதாவது மதுவுக்கான சந்தயைப் பேணிப்பாதுகாக்கும் காரணிகளில் அரசியல் கட்சிகளும் அடங்குவர் என்பதை வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் குறிக்கோளாகும்.
தொடரும்.     
                                                                               
அ.கௌரிகாந்தன்: 19/08/2015 திங்கள்

மதுவின் கோரத்தாண்டவத்திற்குத் துணைநிற்கும் காரணிகள். தொடர்-1



    மது ஒழிக!, மதுவை ஒழிப்போம், பூரண மதுவிலக்கு எனக் கூட்டத்தோடு கூட்டமாக நின்று முழங்குவதற்குப் பதிலாக, மதுவின் கோரத்தாண்டவம் பற்றி பேச முற்படுவது ஏன்? பூரண மது ஒழிப்பின் ஓங்காரத்தை பலவீனப் படுத்தத் தானே? அதன் வீரியத்தைக் குறைப்பதற்காகத்தானே? மது ஒழிப் பாளர்களிடையே குளப்பத்தை உருவாக்குவதற்காகத்தானே? எனப் பல கேள்விகள் எழுவது இயல்பு. ஆம், அப்படித்தான் என்று எடுத்துக் கொண் டால் அதில் ஒன்றும் தப்பில்லை.
       ஏனெனில், மது ஒழிப்பு என்பது வெறுமனே ஒரு திட்டமல்ல; அது ஒரு தொடர் சமூக-செயற்பாடாகும் (Social-phenomenon). ஆனால், டாஸ்மார்க் கடைகளை மூடல்/ சீர்திருத்தல்/ ஒழுங்குமுறைப்படுத்துதல்/ அமைவிட ங்களை நெறிப்படுத்தல் ஆகியன சமூக-செயற்பாடுகளல்ல, மாறாக அவை வெறுமனே வேலைத்திட்டங்கள் மாத்திரமேயாகும். நிச்சயமாக இவை எளிமையான வேலைத்திட்டங்களல்ல பல தடைகளைக் கொண்ட சிக்க லான(complicated but not complex) வேலைத்திட்டங்களாகும்.
    இருந்தும் இவை நடைமுறைப்படுத்த முடியாத திட்டங்களல்ல. அரசும், அரசாங்கமும், அரசியல் கட்சிகளும், ஊடகங்களும், மக்களும் உறுதியாக இருந்தால் இவற்றை நடைமுறைப்படுத்துவது தென்பது முடியாத காரியமல்ல. மிக எழிமையான திட்டங்களான, மணல் அள்ளுவதை நெறிப்படுத்தல், ஏழைகளுக்கான பங்கீட்டுப் பொருட்கள் கள்ளச்சந்தைக்கு செல்வதைத் தடுத்தல், கல்விமான்களே காமுகர்களாக இருப்பதைத் தடுத்தல், அரசியல் வாதிகளில் இருந்து அதிகாரிகள்வரை ஊளல் பேர்வளிகளாக இருத்தல், மோட்டார் சயிக்கிள் தலைக்கவசம் அணிதல் ஆகியவற்றையே நிறை வேற்றுவதில் தள்ளாடும் தமிழகம், டாஸ்மாக்கை நெறிமுறைப் படுத்தும் திட்டத்தை முறையாக நிறைவேற்றுமா என்பது சந்தேகந்தான். நம்புவோம், அதற்காகப் போராடுவோம்.
       ஆனால், மது ஒழிப்பு அல்லது பூரண மதுவிலக்கு என்பதோ ஒரு சமூக-செயற்பாடாகும். அதுவும் இது ஒரு எழிமையான சமூக செயற்பாடல்ல (simple Social-phenomenon).மாறாக அது அதிக தொகுப்புத்தன்மை மிகு சமூக சமூக செயற்பாடாகும் (Much more complex Social-phenomenon). அது மட்டுமல்ல இது தனித்த ஒரு தொகுப்புத்தன்மை மிகு சமூக செயற்பாடல்ல, பல தொகுப்புத்தன்மை மிகு சமூகநிகழ்வுப் போக்குகளின் கூட்டுச்சேர்க்கையாகும்(compound).
        திட்டத்திற்கும், சமூக தொகுப்புத்தன்மை மிகு சமூக சமூக செயற் போக்குக்கும் இடையேயான வேறுபாடுகளைப் புரிந்து கொள்வதற்கான ஒரு எடுத்துக்காட்டு; சுதந்திரப்போராட்டத்தின் போது நடைபெற்ற “உப்பு அள்ளுதல்”,“கதர் ஆடைகள் தரித்தல்”, அந்நிய ஆடைகளைக் கொளுத் துதல் ஆகியனவை வேலைத்திட்டங்களாகும். இவை எழிமையான வையல்ல(simple). பல தடைகளைக் கொண்ட சிக்கலான (complicated but not complex) வேலைத்திட்டங்களாகும். ஆனால், சுதந்திரப் போராட்டம் அவ்விதமானதல்ல.   அது தொகுப்புத்தன்மை மிகு சமூக  செயற்பாடாகும்.
        திட்டங்களைப் பற்றிய புரிதல்களை மட்டும் வைத்துக்கொண்டு காந்தி, நேரு, சவாக்கர், அம்பேத்கர், ஜின்னா, சுபாஷ் சந்திரபோஷ், பகவத் சிங், இடதுசாரிகள் ஆகிய வெவ்வேறு முனைகளைப் பற்றியும் அம்முனைகளுக்கிடையேயான தொடர்புகளைப் பற்றியும் புரிந்துகொள்ள முடியாது. சுதந்திரப் போராட்டம் எனும் தொகுப்புத்தன்மை மிகு சமூக சமூக செயற்பாடைப் புரிந்து கொண்டால்தான் இவை முடியும்.
           மது உற்பத்தியையும் விநியோகத்தையும் மேலும் மேம்படுத் துவதற்கான வேலைத்திட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு மதுஒழிப்பு, பூரண மதுஒழிப்புப் பற்றிப் பேசுபவர்களை வஞ்சகர் என்று அழைக்காமல் வேறு எவ்விதம் அழைப்பது. இவ் வஞ்கர்கள் பல அணிகளாகப் பிரிந்துள் ளார்கள். ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு வேலைத்திட்டம் உண்டு. அவை ஒன்றுடன் ஒன்று ஒத்துவராதவையாகவும் இருக்கலாம், அல்லது அத்திட்டங்கள் மூலம் கிடைக்கும் பண லாபத்தையும் பிற சமூக இலாபங் களையும், எனைய அணிகளுடன் பங்கிட்டுக் கொள்வதை இவர்கள் விரும்பாமலும் இருக்கலாம். குறைந்தது டாஸ்மாக்கை கண்டிப்பதில் கூட பேரளவுக்குக்கூட ஒன்றாகச் சேரமுடியாதுள்ளார்கள். இவர்களுடன் இணைந்து கூட்டத்தோடு கூட்டமாகச் சேர்ந்து மதுஒழிப்புக் கோஷமிட சமூக நேயமுள்ள எவனும் சம்மதிக்கமாட்டான்.
         அடுத்த பக்கத்தில், மது ஒழிப்பை நேர்மையாகவும் , உண்மையாகவும் விரும்பி டாஸ்மார்க கடைஅடைப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோர், மற்றோர் தனி அணியாகத் திரண்டு வருகிறார்கள். இவர்கள் போலிகளும் அல்ல, வஞ்சகர்களும் அல்ல. இவர்கள் சமூகத்தை உண்மையாக நேசிப்பாளர்களாகும். ஆனால், டாஸ்மாக கடையகற்றல் மது ஒழிப்பு எனும் தொகுப்புத்தன்மை மிகு சமூக சமூக செயற்பாட்டின் வெற்றியாக மாறும் என இவர்கள் நம்புவது ஒரு வெற்றுக் கற்பனை யேயாகும். இயல்பான கோபமும், அதை அடியொற்றி எழும் இயல்பான எழுச்சிகளும் நிலவும் சமநிலையைக் குலைக்க உதவக்கூடும், ஆனால் கீழ்வரும் நிபந்தனை நிறைவேறாவிட்டால், இவ் எழுச்சிகள் புதிய சமநிலையை உருவாக்க உதவமாட்டாது. அழிவு சாத்தியமாகலாம் ஆனால் ஆக்கம் சாத்தியமல்ல. தொகுப்புத்தன்மை மிகு புதிய சமூக சமூக செயற்பாடுகளை உருவாக்கவும், பழையன்வற்றை அழிக்கவும் வல்லமை மிக்க சமூக-அரசியல் அமைப்புகள் உருவாகவேண்டும் என்பதே அவ் நிபந்தனையாகும். இது உடனடி சாத்தியமில்லை தொடர் எழுச்சிகளினூ டாகவே சாத்தியமாகும்.
         ஆகவே மது ஒழிப்பு எனும் தொகுப்புத்தன்மை மிகு சமூக சமூக செயற்பாட்டை வெற்றி கொள்வதற்கான வேலைத்திட்டங்களை வகுத்துக் கொள்ளவேண்டும். டாஸ்மாக் கடை எதிர்ப்பு அதற்கான வேலைத் திட்டங்களில் ஒன்றாகும். ஆனால் அது மட்டும் போதாது. இத்திட்டம் மது விநியோகத்தை நெறிப்படுத்துவதில் மட்டும் முடியக்கூடிய வாய்ப்புகளே அதிகமாக உண்டு. வேறு திட்டங்களும் வேண்டும்.
       அதற்கு முன்னர் மது பற்றிய மனிதர்களின் புரிதல் என்னவாக இருக்கவேண்டும் என்பதை நோக்குவோம். மது எமக்குப் புறத்தேயிருந்து வந்த ஒரு இயற்கை அனர்த்தமல்ல. அது நாம் எமக்காக உருவாக்கிக் கொண்டது. சுமார் 5000வருடங்களுக்கு முன்னரே நாம் அதை உருவாக்கிவிட்டோம். 5000வருடங்களாக நாம் அதைப் பயன்படுத்தியும் வருகிறோம். சிற்சில சந்தர்ப்பங்களில் நாம் அதை தவறுதலாகப் பயன் படுத்தியும் உள்ளோம். சிற்சில சந்தர்ப்பங்களில் மாத்திரந்தான் என்ப தையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். பிராமணியம் இந்திய சமூகத்தை தனது ஆதிக்கத்துக்கு கொணர்வதற்க்கு முற்பட்ட காலத்தில் இத் தவறு நடந்துள்ளது. ஆனால் இந்திய சமூகம் அத்தவறுகளைத் திருத்திக் கொண்டது, மதுவுக்கு அடிமையாகும் நிலையில் இருந்து தன்னை மீட்டுக்கொண்டது. மனிதர்கள் மீண்டும் மதுவை தமது கட்டுப்பாட்டின்கீழ் கொணர்ந்தார்கள். இந்திய மக்கள், பௌத்த, ஜைன சமயங்களுக்கு காலாதி காலமும் நன்றி சொல்லக் கடமைப்பட்ட வர்களாகும். இதனால், பௌத்த இந்தியா மிகப்பெரும் வளர்திசைப் பண்பாட்டையும், பாரிய அறிவியல் தத்துவங்களையும் படைத்தது.  பௌத்தம் வீழ்ந்ததன் பின்னர் முழு நிறைவான பிராமணிய இந்தியா தோற்றம் பெற்றது. சதுர் வர்ண சாதியம் தோற்றுவிக்கப்பட்டது. அதன் கடைசிப் படிகளில் அமுக்கிவைக்கப்பட்டிருந்த, கீழ்க்குடி இந்தியர் மதுவுக்கு அடிமையாக்கப் பட்டார்கள். மேட்டுக்குடி இந்தியா இது விடயத்தில் கணக்காக நடந்து கொண்டது. 
     அதைத் தொடர்ந்து வந்த இஸ்லாமிய இந்தியா கீழ்க்குடியின் கணிசமான பகுதியை மதுவின் அடிமைத்தனத்தில் இருந்து மீட்டது. மது மீழவும் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதனால், இந்தியாவின் சதுர்வர்ண சாதியக் கட்டுமானத்தில் பாரிய வளர்திசை மாற்றங்கள் ஏற்பட்டன. அதற்கடுத்ததாக வந்த பிரித்தானிய-இந்தியா மதுவில் மனிதர்களை மூழ்கி எடுத்தது. மனிதன் மதுவுக்கு அடிமையானான். மதுப்பழக்கம் மதிப்பூட்டப்பட்டது, அது உயர்ந்த தோர் நாகரிகமாக அறிமுகமானது. மனிதர்கள் மதுவுக்கு அடிமையா னார்கள். அதை நாகரிகமாகவும் கருதினார்கள். சுதந்திர இந்தியாவில் மனிதர்கள் மதுவிலிருந்து மீட்கப்பட்டார்கள். மீண்டும் மது மனிதர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொணரப்பட்டது. இன்று நாம் வாழும் இந்தியா காப்ரேட் இந்தியாவாகும். இவ்விந்தியா மனிதர்களை மதுவுக்கு அடைமைப்படுத்துவதில் மிகவும் வினைத்திறனுடன் செயல்பட்டு வருகின்றது. எந்த மனிதர்கள் காப்ரேட் இந்தியாவின் சமூக சமநிலை யைக் குலைக்கக் கூடியவர்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறார்களோ அங்கெல்லாம் மதுவால் அவர்கள் வளைத்துப் போடப்படுகிறார்கள். பிராமணிய இந்தியாவின் அனுபவங்கள் மதிப்பூட்டப்பட்டு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ்விதம் வளைத்துப் போடுவதற்கான வலையின் தமிழ்நாட்டு வடிவங்களில் ஒன்றுதான் டாஸ்மார்க் கடை வலைப்பின்னலாகும். வேறு வடிவங்களும் தமிழ் நாட்டில் உண்டு என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

   இதனால்தான் மதுவின் கோரத்தாண்டவத்திற்குத் துணைநிற்கும் காரணிகள் என்ற தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது.
தொடரும்……….