Featured post

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...

Wednesday 26 December 2018

துறவறத்தானுக்குரிய இலக்கணங்கள்


துறவறத்தானுக்குரிய இலக்கணங்கள்

                   பௌத்த மரபின்படி, துறவி என்பவன் சமுகத்தின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்தவன். இன்றைய சொற்பயன்பாட்டில் இலட்சியவாதியாகும். புலவன் என்பவன் சமூகப் பிரச்சனைகளை இலக்கிய நடையில் கூறும் புத்திஜீவி. இவ் இருவரினது குணாம்சங்களும் எவ்விதம் இருக்கவேண்டுமென பௌத்த-சமண வழித் தோன்றலான நாலடியார் கூறும் கருத்துக்கள் என்ன என்பதை பார்ப்போம்.
அதற்கான அவசியம் என்ன?
                1950களில் இருந்து 2009வரை இலங்கை அரசியல் தொடர்ச்சியான பல போராட்டங்கள் நிறைந்த நாடாகவே இருந்தது.
             மலையகத் தொழிலாளர்கள் சிங்களத்தொழிலாளர்ள் ஆகியோர் தமது தொழிற்சங்க உரிமைகளுக்காகவும், தொழில் முறைமைகளுக்காவும், ஊதிய நிர்ணயங் களுக்காகவும் கூட்டாகவும் தனித்தனியாகவும் நடத்திய போராட்டங்கள். 1960 களின் பின் தொழிற்சங்கவாதப் போராட்டங்களாக குறுகிவிடுகின்றன.
           விவசாயப் போராட்டங்கள் என பெரியளவில் நடைபெறாவிட்டாலும் புரட்சிகர சிந்தனையுடன் அவர்களை அணிதிரட்டுவதற்கான முயற்சிகள் சிங்கள தமிழ் விவசாயிகள் இருசாராரிடையேயும் நடந்து கொண்டேயிருந்தன.
          தமிழரசுக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரு கட்சிகளின் தலைமையில் மாணவர்கள் அணிதிரண்டும், முதலாளித்துன ஜனநாயகப் போராட்டங் களுக்காக அணிதிரண்டும் வந்தனர்.
        பிரித்தானிய காலனியல் ஆதரவுக் கட்சிகளான யு.என்.பி, தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு எதிராக தமிழரசுக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இடதுசாரிக் கட்சிகள் ஆகியன இணைந்தும் தனித்தனியாகவும் முதலாளித்துவ தேசிய இயக்கங் களை உருவாக்கி வேகமாக வளர்த்துவந்தன.
        சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் தமது சமத்துவத்துக்காக நடத்திய முதலாளித்துவ ஜனநாயகப் போராட்டங்கள். யாழ் குடாநாட்டில் நடந்த தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்கள் ஒரு எடுத்துக்காட்டு.
       1970களின் பின் தமிழ், சிங்கள, முஸ்லீம் இழைஞர்கள் தனித்தும் இணைந்தும் உருவாக்கிய இன-தேசிய இயக்கங்கள்.
            இவ்விதமாக 2009வரை இலங்கை அரசியல் களம் போராட்டங்களின் கொதிநிலைக் களமாக இருந்தது. அன்றில் இருந்து இன்றுவரை(2018) இலங்கை அரசியல் களம் போராட்டங்களின் உறங்குநிலைக் களமாகவே உள்ளது. உழைக்கும் வர்க்க இலட்சியம் என்ற நிலையில் இருந்து நோக்கினாலும், ஒடுக்கப்படும் இனவழி, சாதியவழி, பாலினவழி சமூகக் குழுமங்களின் சமத்துவத்திற்கான போராட்டம் எனும் நிலையில் இருந்து நோக்கினாலும், உறங்கு நிலையே பொதுவான போக்காக உள்ளது. முஸ்லீம்கள் விதிவிலக்கு, அவர்கள் தமது உறங்குனிலையில் இருந்து விழித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.
       இலங்கையின் இந்த அறுபதுகால தொடர் போராட்டவரலாற்றில் ஈடுபட்ட பல இலட்சியவாதிகள் இன்னமும் உயிரோடும் இலட்சியத்தோடும் உள்ளார்கள். இழைஞர்கள்-முதியோர்கள்; ஆண்கள்-பெண்கள், தமிழர்-சிங்களவர், ஊனமுற்றோர்கள்-ஊனமுறாதோர்கள் ஆகிய பலரையும் உள்ளார்கள். புதிய இலட்சியவாதிகள் உருவாக வேண்டியது அவசியமாய் உள்ளது. ஆனால், இலங்கை சமூகம் அதற்கான தயார் நிலையை இன்னமும் எட்டவில்லை. விரைவில் எட்டுமா என்பதையிட்டு எதுவும் சொல்லமுடியாத நிலை. எவ்விதமிருந்தாலும் இலட்சிய வாதி களை சமூகம் தமது சொத்தாக மதிக்கவேண்டும், அவர்களும் அடுத்தகட்ட நகர்வுக்குரிய இலட்சிய வாதிகளாக தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது புதியவர்களை உருவாக்க வேண்டும்.

அதை உணர்த்தவே இப்பதிவு.

எடுத்துக்கொண்ட நூல்:- நாலடியார், கு.மதுரை முதலியார் தெழிவுரையுடன்.

பக்-10-4 அறம் செய்
நின்றன நின்றன நில்லா எனவுணர்ந்து
ஒன்றின வொன்றின வல்லே செயின் செய்க
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று.
       முதலியார் உரை:- உயிர் உட்போடு கூடி வாழ்கின்ற நாள்கள் செல்கின்றன, செல்கின்றன; யமன் கோபித்து விரைந்து வருகிறான், வருகிறான்; ஆதலால், நிலைபெற்றன நிலை பெற்றன என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிற செல்வப் பொருள்கள் எல்லாம் நிலைபெறா என்ற உண்மையை அறிந்து, உம்மால் செய்வதற்குக் கூடிய அறங்களையெல்லாம் செய்ய நினைப்பீராயின், விரைந்து செய்க.
யக்ஞத்தின் விளக்கம்:-
பக்-11-6 மரணத்தை வெற்றிகொள்ள, இசைபடவாழ் பகிர்ந்துண்டு மகிழ்!
இழைத்தநாள் எல்லை யிகவா பிழைத்தொரீஇக்
கூற்றம் குதித்துயரந்தார் ஈங்கில்லை-ஆற்றப்
பெரும்பொருள் வைத்தீர வழங்குமின் நாளைத்
தழீஇம் தழீஇம் தண்ணம் படும்.
முதலியார் உரை:- மிகப் பெருஞ்செல்வத்தைச் சேர்த்து வைத்திருப்பவர்களே! உடலோடு கூடிவாழ அளவு செய்துள்ள நாட்கள் அவ்வளவில் தவறிப்போய்த் தம் அளவைக்கடவா. யமனிடத்தினின்றும் அப்புறப்பட்டு உயிர் பிழைத்திருப்பவர் இவ்வுலகத்தில் இல்லை. நாளைக்கே இறந்தவர்க்குரிய சாப்பறை தழீஇம் தழீஇம்என்னும் ஓசை உண்டாகும்படி அடிக்கப்படும். ஆதலால், விரைவாக அறம் செய்யுங்கள்.
பக்-12-9 இசைபடவாழ் பகிர்ந்துண்டு மகிழ்!
உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான்
துன்னருங் கேளிர் துயர்களையான்-கொன்னே
வழங்கான் பொருள்காத் திருப்பானேல் அஆ
இழந்தானென் றெண்ணப் படும்.
முதலியார் உரை:- ஒருவன் நல்ல உணவுகளை உண்ணாமலும், மதிப்பை நிலைக்கச் செய்யாமலும், பெறுகின்ற புகழைச் செய்து கொள்ளாமலும், பெறலரிய உறவினரது வறுமைத் துன்பத்தை நீக்காமலும், கைம்மாறு வேண்டாமலே இரப்பவர்க்குக் கொடாமலும், பொருளைக் காத்திருப்பானாயின், ஐயோ! அவன் அப்பொருளை இழந்தான் என்று யாராலும் எண்ணப்படுவான்.
யக்ஞத்தின் விளக்கம்:- இசைபட வாழவும், பகிர்ந்துண்டு மகிழவும் தயாரில்லாதவனிடம் செல்வம் இருந்தென்ன பயன்.

பக்-22-40 செய்யும் தொழிலல்ல உயர்வுதாழ்வு, மனத்தின் வளத்தில்தான் உயர்வுதாழ்வு.
மான அருங்கலம் நீக்கி யிரவென்னும்
ஈன இளிவினால் வாழ்வேன்மன்-ஈனத்தால்
ஊட்டியக் கண்ணும் உறுதி சேர்ந்து இவ்வுடம்பு
நீட்டித்து நிற்கும் எனின்.
முதலியார் உரை:- இழிவான தொழில்களினாலும் உணவு முதலியவற்றை கொடுத்து வளர்த்த இடத்தும், மனமாகிய பெறுதற்கரிய அணியைவிட்டு, இந்த உடம்பு வலிமையைப் பெற்றுப் பல்லாண்டு நிலைபெற்று நிற்குமானால், பிச்சையெடுத்தல் என்று சொல்லப்படும் இழிவைத் தரும் தொழிலினால் உயிர் வாழ்வேன்.
யக்ஞத்தின் விளக்கம்:-மனச்சாட்சியைக் கொன்று, பெரும்இழில்தொழில் செய்து பேர் வாழ்வு வாழ்வதைவிட, சாவைத்தடுக்க பிச்சை எனும் இழி தொழில் செய்வது மேல்.
பக்-21-37 உடல் செழுமையின் குறிக்கோள் மனச் செழுமையே
மக்களால் ஆய பெரும்பயனும் ஆயுங்கால்
எத்துணையும் ஆற்றப் பலவானால்-தொக்க
உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகாது உம்பர்க்
கிடந்துண்ணப் பண்ணப் படும்.
முதலியார் உரை:- மக்கட் பிறப்பினால் உண்டாதற்குரிய சிறந்த பயன்களும், ஆராயும் இடத்து, மிகவும் அநேகம் ஆதலினால், ஏழு தாதுக்களால் கூடிய உடலுக்கே ஒத்த நன்மைகளைச் செய்துகொண்டிராமல், அவ்வுடம்பைக் கொண்டு, மேல் உலகத்தில் இருந்து பேரின்பத்தை அனுபவிக்கும்படி, உயிர்க்குரிய நன்மையாகிய அறங்களைச் செய்ய வேண்டும்.
யக்ஞத்தின் விளக்கம்:-நாலடியாரும், திருவள்ளுவரும் பௌத்த, சமண சிந்தனையாளர் கள். இச்சிந்தனை மேலுலக நம்பிக்கியுள்ள பரமபௌதீகச் சிந்தனையாகும். ஆனால் இவர்களின் மேலுலகம் பிராமணிய, கிறிஸ்துவ மேலுலகங்களல்ல.
பக்-27-57 பின்னடைவுகள், தோல்விகள் ஏற்பட்டாலும் இலட்சியப் பயணம் தொடரட்டும்.
ஊக்கித்தாம் கொண்ட விரதங்கள் உள்ளுடையத்
தாக்கருந் துன்பங்கள் தாம்தலை வந்தக்கால்
நீக்கி நிறூஉம் உரவோர நல்லொழுக்கம்
காக்கும் திருவத் தவர்.
முதலியார் உரை:- முயன்று தாம் பூண்ட விரதங்கள் முழுவதும் கெடும்படி பொறுத் தற்கரிய துன்பங்கள் தம்மிடம் வந்து சேர்ந்தால், அத்துன்பங்களையெல்லாம் தள்ளி, அவ்விரதங்களை நிலை நிறுத்துகின்ற மனவலிமை உடையவரே, நல்ல துறவொழுக் கத்தை விடாமல் காக்கின்ற அழகிய தவமுடையார்.
பக்-51-131 அறிவுடன் கூடிய மனமே அழகானது.
குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல-நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி யழகே யழக.
முதலியார் உரை:- மயிர் முடியின் அழகும், வளைவுள்ள ஆடையினது கரையின் அழகும் கலவைப் பூச்சின் அழகும், ஒருவனுக்கு அழகல்ல. மனத்தில் யாம் நற்குண முடையோம் என்று கருதுகின்ற கோணுதலில்லாத் தன்மையால் கல்வியால் உண்டாகும் அழகே அழகு.
பக்-58-153 வறுமையிலும் சளையாமைதான் இலட்சியவாதம்.
நரம்பெழுந்து நல்கூர்ந்தார் ஆயினும் சான்றோர்
குரம்பெழுந்து குற்றம்கொண்டு ஏறார்-உரங்கவறா
உள்ளமெனும் நாரினால் கட்டி யுளவரையால்
செய்வர் செயற்பா லவை.
முதலியார் உரை:- மேன்மக்கள் வறுமை அடைந்து, நரம்புகள் தோன்றும்படி இளைத் தாராயினும், தமது நல்லொழுக்க வரம்பைக் கடந்து, குற்றமான செயலை மேற்கொள்ளா மல், நமது அறிவையே கருவியாகக்கொண்டு, முயற்சியென்கிற கயிற்றினாலே மனத்தைக் கட்டி, பொருள் உள்ள அளவிற்கு ஏற்ப, செய்யத்தக்க நல்ல காரியங்களைச் செய்வர்.
பக்-63-169 தேடிக் கற்கா நாட்களுமில்லை, பகிர்ந்து மகிழா நாட்களுமில்லை என்று வாழ்பவனே இலட்சியவாதி
கல்லாது போகிய நாளும் பெரியவர்கண்
செல்லாது வைகிய வைகலும்-ஒல்வ
கொடா அது ஒழிந்த பகலும்-உரைப்பின்
படாஅவாம் பண்புடையார் கண்.
முதலியார் உரை:- படித்தற்குரிய நூல்களைப் படியாமல் கழிந்த நாட்களும், பெரியோர்களிடம் நுற்பொருள்களை அறியும் பொருட்டுப் போகாமல் கழிந்த நாட்களும், தம்மால் கொடுக்கக்கூடிய பொருட்களை இல்லையென்று தம்மிடம் வந்து கேட்பவர்களுக்குக் கொடாமல் கழிந்த நாட்களும், சொல்லுமிடத்து, நற்குண நற்செய்கையுடையாரிடத்து உண்டாகாவாம்.
பக்-70-192 தன் தகமையை தொடர்ந்து வளர்த்து வருபவனே இலட்சியவாதி.
ஆடுகோ டாகி அதரிடை நின்றதூ உம்
காழ்கொண்ட கண்ணே களிறணைக்கும் கந்தாகும்
வாழ்தலும் அன்ன தகைத்தே யொருவன்றான்
தாழ்வின்றித் தன்மைச் செயின்.
முதலியார் உரை:- துவளுகின்ற சிறு கொம்பாகி, வழியிலே நின்ற இளமரமும் உள் வயிரம் கொண்டவிடத்தே யானையைக் கட்டுவதற்கு ஆதாரமான தறியாகிவிடும். தான் தன்னை நின்ற நிலையிலிருந்தும் கீழ்ப்படுதல் இல்லாதபடி முயற்சியுடையானாகச் செய்து கொள்வானானால், அவனது வாழ்க்கையும் அப்படிப்பட்ட தன்மையையுடையதே.
பக்-72-198 வறுமைப் பிணியால் இறக்க நேர்ந்தாலும், தான் வாழ்ந்த பெருமைக்கு குந்தகம் தரும் பழிபாவங்களைச் செய்யாதவரே இலட்சியவாதி.
ஈனமாய் இல்லிருந்து இன்று விளியினும்
மானம் தலைவருவ செய்யவோ-யானை
வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்தான்
அரிமா மதுகை யவர்.
முதலியார் உரை:- யானையின் புள்ளிகளையுடைய முகத்தைப் புண் செய்ய வல்ல கூர்மையாகிய நகங்களையும், வலிமையுடைய கால்களையும் உடைய சிங்கத்தின் வலிமை போன்ற வலிமையுடையவர்கள், பொருள் இல்லாராகி, இல்வாழ்க்கையிலிருந்து உணவில்லாமல் இறக்கினும், பழி தம்மிடம் வருதற்குரிய சிறு முயற்சிகளைச் செய்வார்களோ?
பக்-74-205 அனைத்து உறவுகளையும் இழக்க நேர்ந்தாலும் தனது பாதையில் இருந்து விலகாதவனே இலட்சியவாதி.
இன்னர் இனையர் எமர்பிறர் என்னுஞ்சொல்
என்னும் இலராம் இயல்பினால்-துன்னித்
தொலைமக்கள் துன்பம்தீர்ப் பாரேயார் மாட்டும்
தலைமக்கள் ஆகற்பா லார்.
முதலியார் உரை:
      இத்தன்மையர், இவ்வளவினர், உறவினர், அயலார் என்று சொல்லுகின்ற சொல் சிறிதும் இல்லாதவராகிய தன்மையினால், சேர்ந்து துன்பத்தால் தளர்கின்ற மக்களின் வருத்தங்களை ஒழிப்பவர்களே, மேன்மக்களாகும் தன்மையுள்ளவர்.                                                                    
பக்-92-262 கீழோரின் செல்வம் நாடிச்செல்லான் இலட்சியவாதி.
அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும்
கள்ளிமேல் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால்
செல்வம் பெரிதுடையார் ஆயினும் கீழ்களை
நள்ளார் அறிவுடை யார்.
முதலியார் உரை:- கைகளால் அள்ளியெடுத்துக் கொள்ளத்தக்கவை போன்ற சிறிய அரும்புகளையுடையனவாய் இருந்தாலும், அவை சூட்டிக்கொள்ளத்தக்க மலர் அல்லாமையால், உலகில் எவரும் கள்ளிச்செடியின்மேல் பூப்பறிப்பதற்குக் கையை நீட்ட மாட்டார்கள். அதுபோலவே செல்வத்தை மிகுதியாக உடையவர்களாய் இருந்தாலும், அறிவடையார் அச்செல்வத்தைப் பெறவேண்டி கீழ்மக்களை நெருங்கார்.
பக்-102-292  தன்வறுமைநிலை பகிர்வான் இலட்சியவாதி தன்னைப் புரிந்து கொண்டவனிடம் மாத்திரமே.
என்பாய்உகினும் இயல்பிலார் பின்சென்று
தம்பாடு உரைப்பரோ தம்முடையார்-தம்பாடு
உரையாமை முன்னுணரும் ஒண்மை யுடையார்க்கு
உரையாரோ தாமுற்ற நோய்.
முதலியார் உரை:- தமது மானத்தைத் தாமே காக்கும் இயல்புடையார், பொருள் இல்லாமை யால் உணவு கிடையாமல் தம்உடம்பு எலும்பு மாத்திரமாகிச் சிதைவதாய் இருந்தாலும், நற்குணமில்லாத செல்வரது பின்னேபோய், தமது வருத்தத்தைக் கூறுவார்களோ? தமது வருத்ததைத் தாம் சொல்லாமைக்கு முன்னே அறிந்து நீக்கவல்ல கூர்மையாகிய அறிவுடையவர்களுக்குத் தாம் அடைந்த துன்பத்தைக் கூறாதிருப்பாரா?
பக்-106-304 இல்லாமை எவ்வளவு வாட்டினாலும் அறிவிலார் பின்னே தலைகுனிந்து நிற்காதே.
திருத்தன்னை நீப்பினும் தெய்வம் செறினும்
உருத்த மனத்தோடு உயர்வுள்ளின் அல்லால்
அருத்தம் செறிக்கும் அறிவிலார் பின்சென்று
எருத்திறைஞ்சி நில்லாதாம் மேல்.
முதலியார் உரை:- தன்னைத் திருமகள் கைவிட்டாலும், தெய்வம் கோபித்து வருத்தினாலும், ஊக்கம் கொண்டமனத்துடன் தம் மேன்மையை நினைத்தலே யல்லாமல், மேன்மைக் குணம் உடையவன், பொருளைச் சேர்த்துவைக்கும் அறிவிலார் பின்னே சென்று, தலைகுனிந்து நிற்க மாட்டான்.

No comments: